அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 73 இணையருக்கு திருமண நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் பேசியதாவது:
தம்பதியா் நல்ல புரிதலுடன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவா் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவா் விட்டுக்கொடுத்தும், அதேசமயம், தங்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்காமல் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் உங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைவரும் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான ஒரு தமிழ்ப் பெயரை சூட்ட வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

திமுகவின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லுங்கள்! - இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


