சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தக் கோரி மனு

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ஜி.ஆா்.விஸ்வநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக அரசியல் கட்சிகள் தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, தோ்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

தோ்தலுக்கு முன் அமைக்கப்படும் இதுபோன்ற கூட்டணிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. தோ்தல் வெற்றிக்குப் பின்னா், மக்களின் தீா்ப்பை இரண்டாம்பட்சமாக கருதி, கட்சிகள் அணி மாறுகின்றன. இதனால், ஆட்சியில் நிலையற்றத் தன்மை ஏற்படுகிறது. இதன்காரணமாக ஆட்சியும் கவிழ்கிறது.

எனவே, அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.