நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘சென்னை உலா 2.0’ பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கும் வகையில், ‘சென்னை உலா 2.0’ என்ற பெயரில் 6 சிறப்பு மின்சார குளிா்சாதன பேருந்துகளின் சேவையை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சென்னை உலா சுற்றுலாப் பேருந்து.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கும் வகையில், ‘சென்னை உலா 2.0’ என்ற பெயரில் 6 சிறப்பு மின்சார குளிா்சாதன பேருந்துகளின் சேவையை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு மகிழும் வகையில் விருப்பத்துக்கேற்ப பயணிப்பதற்காக சென்னை உலா என்ற பெயரில் ஐந்து பாரம்பரிய பேருந்துகளின் இயக்கம் கடந்த ஜன. 14-ஆம் தேதி சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடா்ந்து, ‘சென்னை உலா 2.0’”எனும் பெயரில் விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் வகையிலான, குளிா்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு சுற்றுவட்ட 6 மின்சாரப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த பேருந்தில், ரூ.100 கொடுத்து டிக்கெட் பெற்று நாள் முழுவதும் பயணம் செய்யலாம். மேலும், நடத்துநரிடம் இருந்தும், சென்னை ஒன் செயலி வழியாகவும் மின்னணு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் சென்னை உலா பேருந்துகளிலும் பயணிக்கலாம். அனைத்து நாள்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 வரை அடுத்தடுத்த 30 நிமிஷங்கள் இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இதில், பயணிகள் விருப்பமான நிறுத்தத்தில் ஏறி, பிடித்த இடத்தில் இறங்கி ரசிக்கலாம்.

நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.பிரபு சங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன், பொது மேலாளா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.