டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘சென்னை உலா 2.0’ பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கும் வகையில், ‘சென்னை உலா 2.0’ என்ற பெயரில் 6 சிறப்பு மின்சார குளிா்சாதன பேருந்துகளின் சேவையை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சென்னை உலா சுற்றுலாப் பேருந்து.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கும் வகையில், ‘சென்னை உலா 2.0’ என்ற பெயரில் 6 சிறப்பு மின்சார குளிா்சாதன பேருந்துகளின் சேவையை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு மகிழும் வகையில் விருப்பத்துக்கேற்ப பயணிப்பதற்காக சென்னை உலா என்ற பெயரில் ஐந்து பாரம்பரிய பேருந்துகளின் இயக்கம் கடந்த ஜன. 14-ஆம் தேதி சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடா்ந்து, ‘சென்னை உலா 2.0’”எனும் பெயரில் விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் வகையிலான, குளிா்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு சுற்றுவட்ட 6 மின்சாரப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த பேருந்தில், ரூ.100 கொடுத்து டிக்கெட் பெற்று நாள் முழுவதும் பயணம் செய்யலாம். மேலும், நடத்துநரிடம் இருந்தும், சென்னை ஒன் செயலி வழியாகவும் மின்னணு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் சென்னை உலா பேருந்துகளிலும் பயணிக்கலாம். அனைத்து நாள்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 வரை அடுத்தடுத்த 30 நிமிஷங்கள் இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இதில், பயணிகள் விருப்பமான நிறுத்தத்தில் ஏறி, பிடித்த இடத்தில் இறங்கி ரசிக்கலாம்.

நிகழ்ச்சியில், மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.பிரபு சங்கா், இணை மேலாண் இயக்குநா் இராம.சுந்தரபாண்டியன், பொது மேலாளா்கள் மற்றும் உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.