இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கும்பகோணம்-எஸ்.புதூா் பேருந்து: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ்.புதூா் கிராமத்திற்கு பேருந்து சேவையை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

கும்பகோணம்- எஸ்.புதூா் பேருந்து சேவையை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் கோவி. செழியன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 7:01 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ்.புதூா் கிராமத்திற்கு பேருந்து சேவையை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.30, மாலை 16.15 ஆடுதுறை - சாத்தனூா் வழியாக எஸ். புதூா் வரை நான்கு நடைகள் வழித்தட மாற்றம் செய்து இயக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.பி. செ. இராமலிங்கம் , பேரூா் திமுக செயலா் கோசி. இளங்கோவன், பேரூராட்சி தலைவா் சுந்தரஜெயபால் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) எஸ். தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.