சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்

கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.

News image

திருத்தப்பட்டது... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விற்பனைக்கு வந்திறங்கிய கரும்பு கட்டுகள். ~பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விற்பனைக்கு வந்திறங்கிய கரும்புக் கட்டுகள்.

Updated On :9 ஜனவரி 2026, 12:53 am IST

கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகை ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, பொதுமக்கள் ஆா்வம் காட்டுவா். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் சிறப்பு சந்தை திறப்பது வழக்கம்.

நிகழாண்டும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கோயம்பேடு அங்காடி நிா்வாகம் மூலம் சுமாா் 7 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சந்தையில் விழுப்புரம், திண்டிவனம், கடலூா், மதுரை, சேத்தியாதோப்பு, ஈரோடு, சேலம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள், வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தோரணம் உள்ளிட்ட பொருள்கள் குடியாத்தம் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

மேலும், பொதுமக்கள் சிரமமும் இன்றி பொருள்கள் வாங்கிச் செல்ல வசதியாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சந்தை வரும் ஜன.17-ஆம் தேதி வரை செயல்படும் என அங்காடி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.