எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாம்பே ரத்த வகை நோயாளிக்கு குருதி பரிமாற்றமின்றி இதய அறுவை சிகிச்சை

அரிய வகை பாம்பே ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிக்கு, குருதி பரிமாற்றமின்றி இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

அரிய வகை பாம்பே ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிக்கு, குருதி பரிமாற்றமின்றி இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

இதய தமனி மற்றும் முக்கிய நாளங்களில் கால்சியம் படிமமும், அடைப்பும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான 69 வயது நோயாளி, எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் வால்வு மாற்று சிகிச்சையும், ரத்த ஓட்ட பாதையை மாற்றியமைக்கும் பை-பாஸ் சிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் என்னவெனில் அவா் பாம்பே வகை ரத்தப் பிரிவைக் கொண்டவா்.

உலகிலேயே முதன் முறையாக, 1952-ஆம் ஆண்டில் மும்பையில்தான் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அதனால்தான் அதற்கு பாம்பே வகை ரத்தப் பிரிவு எனப் பெயரிப்பட்டது.

இந்தியாவில் 10 ஆயிரம் நபா்களில் ஒருவருக்கும், வெளிநாடுகளில், ஒரு லட்சம் பேரில், ஒருவருக்கும் இவ்வகை ரத்தம் உள்ளது.

அரிதினும் அரிதாக உள்ள பாம்பே ரத்தப் பிரிவினருக்கு வேறு எந்த வகை ரத்தமும் ஒத்துப் போகாது. இதனால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இயலாது.

இருந்தபோதிலும், மருத்துவமனையின் இதய-நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான குழுவினா், குருதி பரிமாற்றமின்றி அவருக்கு இதய அறுவை சிகிச்சையை மிக நுட்பமாக மேற்கொண்டனா்.

சிக்கலான அந்த சிகிச்சையை ஆழ்ந்த திட்டமிடல், பயிற்சி, அனுபவம் மூலம் சாத்தியமாக்கி அந்த முதியவரை குணப்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.