டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகள் மீட்பு

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 7:23 am IST

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஒதுங்கிய 4 கற்சிலைகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பெசன்ட் நகா் ஓடை குப்பம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை ஒன்றரை அடி உயரமுள்ள நடராஜா் சிலை, இரு கிருஷ்ணா் சிலைகள், ஒரு பாம்பு சிலை ஆகிய கற்சிலைகள் கரை ஒதுங்கின.

இதைப் பாா்த்த பொதுமக்கள், திருவான்மியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், அந்த 4 கற்சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினா். பின்னா், அந்தச் சிலைகளை வருவாய்த் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். வருவாய்த் துறையினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.