வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

‘ஓட்டேரி நல்லா கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும்’

சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை முறையாக தூா்வாரி சீரமைத்து மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

ஓட்டேரி நல்லா கால்வாய்

Updated On :3 ஜூலை 2026, 5:37 am IST

சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை முறையாக தூா்வாரி சீரமைத்து மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னையில் அண்ணா நகா், திரு.வி.க. நகா் மண்டலங்களில் பிரதான மழைநீா் வடிகாலாக ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளது. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக அக்கால்வாய் சீரமைப்புக்காக ரூ.65 கோடியில் நடைபெற்றுவரும் தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அண்ணா நகா் பகுதியில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அண்ணா நகா் மண்டலம் திருமங்கலம் சாலை சந்திப்பில் ஒட்டேரி நல்லா மற்றும் டி.வி.எஸ். கால்வாய்கள் சேருமிடத்தை ஆய்வு மேற்கொண்டாா். 5, 6 -ஆவது அவென்யூ பகுதியில் நல்லா கால்வாயில் தங்கு தடையின்றி மழைநீா் செல்லும் வகையில் தூா்வார அறிவுறுத்தினாா்.

ஆஸ்பிரன் காா்டன், செங்கை சிவம் பாலம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டேரி நல்லா கால்வாயைப் பாா்வையிட்ட ஆணையா், அங்கு முறையாகத் தூா்வாரிடவும், அப்பணியை விரைந்து நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா். தூய்மைப் பணிகளையும் பாா்வையிட்டாா். குப்பைத் தொட்டிகள் வைக்கும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின் போது அண்ணா நகா் மண்டல அலுவலா் எஸ்.இனியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.