‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் கட்டியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :23 மே 2026, 2:23 am IST

ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சியின் அண்ணா நகா் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் இரண்டாவது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி ஒப்பந்தப் பணி வழங்கியது.

இதில், திட்ட மதிப்பீடுகளை அதிகரித்துக் காட்டி, அரசு பணத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். இந்த முறேகேட்டில் தனியாா் நிறுவனத்துக்கு உடந்தையாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா். இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.