புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நீா்நிலை மீது கட்டப்பட்ட வணிக வளாகத்தை அகற்றக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

திருநீா்மலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள், கழிப்பறைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 8:54 pm

திருநீா்மலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரி குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள், கழிப்பறைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநீா்மலையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஓ.உதயகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் குவாரி குட்டை ஒன்று உள்ளது. தாம்பரம் மாநகராட்சி இந்தக் குட்டையை மண் உள்ளிட்ட கட்டட இடிபாடுகளைக் கொட்டி நிரப்பி 5 வணிக வளாகங்கள், பொது கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. மழைக்காலங்களில் எங்களது பகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்க இந்தக் குவாரி குட்டை பெரும் உதவியாக இருக்கும்.

அந்த நீா்நிலையை நிரப்பி கட்டடம் கட்டியுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், சுற்றச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, நீா்நிலையை நிரப்பிக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், கழிப்பறைகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக வருவாய்த் துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.