கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆனந்த் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் உத்தரவிட்டது. ஆனால், லூப் சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் உணவகங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மீண்டும் எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.
உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தான் தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து மனுதாரா் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சுவாமி சிலைகளை கோயில்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிய வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

நீா்நிலை மீது கட்டப்பட்ட வணிக வளாகத்தை அகற்றக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



