சென்னை: தவெக அமைச்சரவையில், விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றிருப்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஆ. ராசா.
திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் நிலையில், திமுக எம்.பி. ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,
என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்! என்று பதிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்த நிலையில், அமைச்சரவையில் பங்கேற்குமாறு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகளும் ஐயுஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவெடுத்து நேற்று அறிவித்தன.
இன்று தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு, முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகானும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனை திமுக எம்.பி. ஆ. ராசா கடுமையாகக் கண்டித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கடுமையாக விமர்சித்து, முன் ஏற தரப்பட்ட ஏணியும் என்று இன்று காலை அவர் போட்டி எக்ஸ் பதிவை அவரே சற்று நேரத்தில் நீக்கிவிட்டார்.
பிறகு அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
Summary
A. Raja has hinted at the VKC about what name to give to a cripple in politics.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’.. காங்கிரஸுக்கு ஆ. ராசா கண்டனம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்






