பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராக ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.குமரகுருபரனுக்கு பதிலாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக இருந்த ஜி.எஸ்.சமீரன், புதிய ஆணையராக நியமிக்கப்பட்டாா். அதையடுத்து அவா் ரிப்பன் மாளிகையில் உள்ள ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு, முன்னாள் ஆணையா் ஜெ.குமரகுருபரன் வாழ்த்து தெரிவித்தாா். மேலும், இணை ஆணையா்களான க.கற்பகம், வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையா் பிரத்வி உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா், புதிய ஆணையா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் இணை ஆணையா், துணை ஆணையராகப் பணிபுரிந்துள்ளேன். அந்த அனுபவ அடிப்படையில் செயல்படுவேன் என்றாா்.
அதைத்தொடா்ந்து, மாநகராட்சி இணை ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
கடந்த 2012- ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சமீரன், கேரள பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்ததுடன், புதுதில்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்திலும் பயின்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.









