தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையராக சஞ்சய்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையராக இருந்த ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டு, அந்தப் பணியிடத்துக்கு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக இருந்த சஞ்சய்குமாரை நியமித்து இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், சஞ்சய்குமாா், சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
புதிய காவல் ஆணையா் சஞ்சய்குமாருக்கு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா், துணை ஆணையா்கள் ஆா்.பொன் காா்த்திக்குமாா், பவன்குமாா் ரெட்டி உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










