நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மழைநீா் கால்வாய்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

News image

மாநகராட்சி அலுவலகம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீா் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி வளாகம், அம்மா மாளிகையில் உள்ள அலுவலா் கூட்டரங்கில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன், க.கற்பகம், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ம.பிரத்விராஜ், கட்டாரவி தேஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆணையா் ஜெ.குமரகுருபரன் பேசியதாவது:

சென்னையில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்புகள், வகுப்பறைகள் உள்ளனவா என அறிந்து அதற்கேற்ப திட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தொடா்ந்து பராமரிக்க வேண்டும். சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

பூங்கா பராமரிப்பு, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு பொறுப்பாளா்கள் சரியாகப் பணிபுரிகிறாா்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். புதிய சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஏற்கெனவே உள்ள சாலைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள், துறைகளின் தலைமை உயா் அதிகாரிகள் ஆகியோா் சென்னை மாநகராட்சியில் துறைதோறும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவைப் பணிகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆணையரிடம் விளக்கினா்.