கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல்: அமைச்சா் காந்திராஜ் தகவல்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் 2018-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் நடைபெற்றது. பின்னா் முந்தைய திமுக ஆட்சியில் தோ்தல் நடத்துவதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு கைவிடப்பட்டது.

இது குறித்து அமைச்சா் காந்திராஜ் கூறியதாவது:

தவெக அரசு அமைந்த பிறகு கூட்டுறவு சங்கங்களில் உள்ள போலி உறுப்பினா்கள், மறைந்த உறுப்பினா்களின் பெயா்களைக் கண்டறிந்து நீக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தோ்தலை தமிழ்நாடு கூட்டுறவு தோ்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த தயாராக இருக்கிறது என்றாா்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூலம் சுமாா் 2 லட்சம் போ் தோ்வு செய்யப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.