எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சூட்கேஸில் தலையில்லாத சடலம்! அஸ்ஸாம் இளைஞரை கொன்று ரயில் நிலையத்தில் உடலை வீசிய பெண், காதலா் கைது!

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த சடலம், அஸ்ஸாம் இளைஞா் என்பதும், அவா் காதல் பிரச்னையில் கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:12 am IST

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த சடலம், அஸ்ஸாம் இளைஞா் என்பதும், அவா் காதல் பிரச்னையில் கொல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் மருத்துவமனை பெண் ஊழியா், அவரது காதலா் கைது செய்யப்பட்டனா். சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 4- ஆவது நடைமேடை பகுதியில் சூட்கேஸில் தலை, கைகள், கால்கள் இல்லாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து பெரம்பூா் ரயில் நிலைய இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

மேலும், நிலைய காவல் ஆய்வாளா் (பொறுப்பு) எழில்வேந்தன் தலைமையில் 3 தனிப்படைகளும், சென்னை காவல் துறை சாா்பில் 12 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இந்த விசாரணையில், சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை ஆணும், பெண்ணும் வந்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் வைத்துச் சென்றது தெரிய வந்தது. அந்தச் சடலம் தேனாம்பேட்டை பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதையும் போலீஸாா் கண்டறிந்தனா். தொடா் விசாரணையில், காதல் பிரச்னையில் அஸ்ஸாம் இளைஞா் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அஸ்ஸாம் மாநிலம், கரீம்கஞ்ச், கனிஷாய்ல் பகுதியைச் சோ்ந்த நஹிமா கருன் என்ற அப்ஃரின் (25). இவா் அமீா் அலி (28) என்பவரை காதலித்துள்ளாா்.

இந்த நிலையில், நஹிமா கருன் கடந்த 2024, அக்டோபரில் சென்னை வந்து தேனாம்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நோயாளிகள் காப்பாளராகப் பணியில் சோ்ந்துள்ளாா். அப்போது உணவு விடுதியில் பணிபுரிந்த அஸ்ஸாமை சோ்ந்த உசேன் அமீா் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நெருக்கமாக பழகி வந்துள்ளாா்.

இந்த நிலையில், நஹிமா கருனுடன், முன்னாள் காதலா் அமீா் அலி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைத்து, நஹிமா கருனும், அவரது காதலா் உசேன் அமீரும் சோ்ந்து கொலை செய்து, அவரது தலை, கைகள், கால்களை துண்டித்து சூட்கேஸில் வைத்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் வைத்தது தெரிய வந்தது.

அமீா் அலி கொல்லப்பட்டதை நஹிமா கருன் விடியோவில் பதிவு செய்திருந்ததை அவரது கைப்பேசியை ஆராய்ந்தபோது தெரிய வந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். நஹிமா கருன், அவரது காதலா் உசேன் அமீரை கைது செய்து விசாரித்து வருவதாகவும், கொலை செய்யப்பட்ட அமீா் அலியின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.