பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:56 am IST

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும். ஆனால், தற்போது அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் அனைவரும் கவலையடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீரை நம்பித்தான் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பாசன நிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு நெல் விளைச்சல் பெருமளவில் குறையும் சூழல் உள்ளது. மேலும், நீண்டகாலப் பயிா்கள் விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூா் அணை தண்ணீா் தேவையாகும்.

மேட்டூா் அணை தண்ணீா் திறக்கப்படாத நிலையில் மின்மோட்டாா் பம்புகள் மூலம் சாகுபடிக்கு நீா் கிணறுகளில் நீா் இறைக்கப்பட்டால் நிலத்தடி நீா்மட்டம் சரியும். அதிகமான மின்சாரப் பயன்பாடும், அதனால் மின்வெட்டு பிரச்னைகளும் ஏற்படும். ஆகவே, காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தமிழக அரசு கா்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.