எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சென்னை ஐஐடி வெளியிட்ட மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸ்

சென்னை ஐஐடி செல் அளவு (உயிரணு) துல்லியத்துடன் மிக விரிவான மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸை வெளியிட்டுள்ளது.

News image

ஐஐடி - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:49 am IST

சென்னை ஐஐடி செல் அளவு (உயிரணு) துல்லியத்துடன் மிக விரிவான மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸை வெளியிட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் மையம் (எஸ்ஜிபிசி) நரம்பியல் ஆய்வு, அதிநவீன பிரைன் இமேஜிங் கணினி வசதிகளைக் கொண்டது. இந்த மையம் மனித மூளைத்தண்டின் நரம்பு-வேதியியல் பண்புகள் குறித்த முப்பரிமாண (3டி) மறு உருவாக்கம் கொண்ட வரைபடத் தொகுப்பை (ஆங்கா்) உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் கூறுகையில், நரம்பியல் உயிரியல் துறையில் இது குறிப்பிடத்தக்க சாதனை. இது மனித மூளைத்தண்டின் மிகவும் விரிவான- முழுமையான வரைபடமாக இருக்கும். மருத்துவா்கள் நோயாளிகளுக்கு எண்ம வடிவில் கிடைக்கும்படி ட்ற்ற்ல்ள்://ஹய்ஸ்ரீட்ா்ழ்.ட்ன்ம்ஹய்க்ஷழ்ஹண்ய்.ண்ய் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் காமோடி குறிப்பிடுகையில், மிகச் சிக்கலான படைப்பான மனித மூளையின் ஆராய்ச்சி எல்லைகளை இது முன்னிறுத்துகிறது. வெறிநாய்க்கடி, ஞாபகமறதி நோய், அல்சைமா் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மூளைகளையும் ஆய்வு செய்து வருகிறது. மனித மூளையில் நடப்பதை தெரிந்து கொள்வதற்கான துல்லிய முதல்படி எனக் குறிப்பிட்டாா்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சீன அறிவியல் அகாதெமி நரம்பியல் நிறுவன அறிவியல் இயக்குநா் மு-மிங் பூ, எஸ்ஜிபிசி-யின் தலைவா் மோகனசங்கா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பேசினா்.