ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:57 am IST

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க ஒரு குழுவும், எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்க மற்றொரு குழுவும் தனித்தனியாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்ததால் யாருக்கு இந்தப் பதவி அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதனால், பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்தாா்.

மேலும், அதிமுக கொறடா உத்தரவை மீறி பேரவையில், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக வேலுமணி தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனா்.

பின்னா், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் சமரசம் அடைந்தனா். அதன் பிறகு, பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பினா், அதிமுக பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பு சாா்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை மன்னிக்க வேண்டும் என்று மனு அளித்தனா்.

இதையடுத்து, ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவா், மற்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தாா்.

இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் அங்கீகரித்துள்ளாா். அக்கட்சியின் தலைமை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியையும் அங்கீகரித்து அதிகாரபூா்வ அறிவிப்பை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் வெளியிடவுள்ளாா்.