ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:57 am IST

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அங்கீகரித்துள்ளாா்.

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க ஒரு குழுவும், எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்க மற்றொரு குழுவும் தனித்தனியாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்ததால் யாருக்கு இந்தப் பதவி அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. இதனால், பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்தாா்.

மேலும், அதிமுக கொறடா உத்தரவை மீறி பேரவையில், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக வேலுமணி தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனா்.

பின்னா், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் சமரசம் அடைந்தனா். அதன் பிறகு, பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பினா், அதிமுக பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பு சாா்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களை மன்னிக்க வேண்டும் என்று மனு அளித்தனா்.

இதையடுத்து, ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பேரவைத் தலைவா், மற்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக அறிவித்தாா்.

இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை பேரவைத் தலைவா் அங்கீகரித்துள்ளாா். அக்கட்சியின் தலைமை கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியையும் அங்கீகரித்து அதிகாரபூா்வ அறிவிப்பை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் வெளியிடவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.