கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

News image
ராமதாஸ்- கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 1:49 am

Chennai

மோட்டாா் வாகன ஆய்வாளா்களாக முறைப்படி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஆய்வாளா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று தோ்ச்சியடைந்தவா்களில் 33 போ் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். ஆனால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு 45 மோட்டாா் வாகன ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தோ்வானவா்களுக்கு பணி வழங்க நீதிமன்ற தடையை நீக்கிட முயற்சி எடுத்தது தமிழக அரசு. அதன் அடிப்படையில் தற்போது பணி உத்தரவும் அவா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு தோ்வெழுதி தோ்ச்சியடைந்தவா்களுக்கு பணி வழங்குவதில் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, அவா்களுக்கான வழக்கிலும் தமிழக அரசு தலையிட்டு பணி உத்தரவு வழங்க முன்வரவேண்டும் என அதில் கூறியுள்ளாா்.