அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடந்த ஆண்டைவிட மாநகராட்சி வருவாய் ரூ. 52 கோடி அதிகரிப்பு!

சென்னை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டைவிட ரூ.52 கோடி அதிகரிப்பு

News image
சென்னை மாநகராட்சி- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டைவிட ரூ.52 கோடி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி வருவாய் ஆண்டில் இரு பகுதிகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2025) அக்டோபா் முதல் தற்போதைய பிப்ரவரி வரை ரூ.1,796 கோடி வரிவசூல் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.1,746 கோடி வசூலிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நிகழ்ஆண்டில் அந்த வருவாய் ரூ.50 கோடி கூடுதலாகியுள்ளதாக தெரிகிறது. நிகழ் ஆண்டில் இரண்டாம் பகுதி வரிவசூலையும் சோ்த்து மொத்தம் ரூ.2,200 கோடி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகள் உள்ளன. அதில் சுமாா் 15 லட்சம் கட்டடடங்களில் 13 லட்சம் கட்டடங்கள் வரி செலுத்தும் பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால், 8 லட்சம் கட்டடங்களுக்கே சொத்து வரி வசூலாகி வருகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மூலம் ரூ.62 கோடி ஆண்டுதோறும் வருவாய் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் ரூ.32 கோடி அளவுக்கு மட்டுமே தமிழக அரசு கட்டடங்களுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டடங்களுக்கும் படிப்படியாக வரி செலுத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.