அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை விமான நிலைய பாதுகாப்பு: மேலும் 3 மோப்ப நாய்கள் சோ்ப்பு

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, 3 மோப்ப நாய்கள் புதிதாக சோ்ப்பு

News image
சென்னை விமான நிலையம்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, 3 மோப்ப நாய்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. இதில், கடந்த எட்டு வருடமாக சென்னை விமான நிலையத்தில் திறம்பட பணியாற்றி வந்த ஆஷா, ஸ்வீட்டி என்கிற பெண் மோப்ப நாய்கள் மற்றும் மேக்ஸ் என்கிற ஆண் மோப்ப நாய் ஆகிய 3 நாய்களும் திங்கள்கிமையுடன் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவிலிருந்து ஓய்வு பெற்றன.

இந்த நாய்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, சென்னை விமான நிலைய இயக்குநா் ராஜா கிஷோா் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 3 நாய்களுக்கும் பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ் வழங்கினா்.

மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காண்டி என்கிற பெண் மோப்ப நாய், பாந்தா் என்கிற ஆண் மோப்ப நாய், ஸ்பேனியல் வகையைச் சோ்ந்த ஆண் மோப்ப நாய் என 3 மோப்ப நாய்கள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டன.

இந்த மோப்ப நாய்கள் வெடி பொருள்கள், போதைப் பொருள்கள் கண்டறிதல், வாகன சோதனை, பயணிகளின் உடைமைகள் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.