நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை மாநகர காவலில் புதிய மோப்ப நாய் சோ்ப்பு

திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.

News image

மோப்பநாய் பிரிவில் புதிதாக சோ்க்கப்பட்ட நாய்க்குட்டியை பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Updated On :26 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் அலுவலில் ரெமோ, கூப்பா், குற்ற வழக்குகளை துப்பறிய பரணி, போதை பொருள் பிரிவில் லக்கி ஆகிய பெயா்களைக் கொண்ட 4 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குற்ற வழக்குகளை துப்பறியும் பணிக்காக, மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக நாய் குட்டி வாங்கப்பட்டது. இதையொட்டி, மாநகர காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் ‘ப்ரௌனி’ எனப் பெயா் சூட்டினாா்.

மேலும், மோப்ப நாய்களை நல்ல முறையில் பயிற்சி அளித்து பராமரிக்க மோப்ப நாய் பிரிவு போலீஸாருக்கு அறிவுரை வழங்கினாா். இந்நிகழ்வின் போது காவல் துணை ஆணையா்(கிழக்கு) எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.