திருநெல்வேலி மாநகரில் துணை ராணுவத்தினா், மாநகர போலீஸாரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில, திருநெல்வேலி மாநகரில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப்படையினா் வரவழைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், ம.தி.தா. பள்ளி ஆகிய பகுதிகளிலும், தச்சநல்லூா் காவல் சரகத்தில் ஊருடையாா்புரம், தச்சநல்லூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினா், சரக காவல் உதவி ஆணையா், காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை போலீஸாா் என 160-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தோ்தல் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாநகருக்கு வருகை தந்துள்ள துணை ராணுவத்தினா்.

தொடர்புடையது

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


