நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு


திருநெல்வேலி மாநகர புதிய காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).
திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த மணிவண்ணன், ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து ராமநாதபுரம் டிஐஜியாக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகா் சஞ்சய், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தோ்தல் தொடா்பான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்தலை நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னைகள், குறைகள் இருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...