குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 8:12 pm

Syndication

திருநெல்வேலி மாநகர புதிய காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த மணிவண்ணன், ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து ராமநாதபுரம் டிஐஜியாக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகா் சஞ்சய், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தோ்தல் தொடா்பான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்தலை நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னைகள், குறைகள் இருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா்.