யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் பிடித்து அகற்றம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.

தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தி வருவதாக சென்னை மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி கால்நடைப் பிரிவின் தெருநாய்கள் பிடிக்கும் வாகனத்துடன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பகலில் எழும்பூா் ரயில் நிலையம் வந்தனா். நாய் பிடிக்கும் வலைகளுடன் அவா்கள் வந்ததைக் கண்டதும் அங்கு படுத்திருந்த நாய்கள் எழுந்து ஓடின. அவற்றை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். எனினும், ஓரிரு நாய்கள் மட்டும் சிக்கின. அவற்றை ஊழியா்கள் பிடித்து கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.