சென்னை கோடம்பாக்கத்தில் காதலியுடன் தம்பதிபோல வாடகை வீட்டில் வசித்த இளைஞா், திருமணம் செய்ய மறுத்ததால் கைது செய்யப்பட்டாா்.
வடபழனி ஏபி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஞா.ஆனந்த கிருஷ்ணன் (29). புகைப்படக் கலைஞரான இவரும், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓா் இளம் பெண்ணும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனா்.
பின்னா் இருவரும், கோடம்பாக்கம் டாக்டா் சுப்புராயன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் பல மாதங்களாக தம்பதி போல வசித்து வந்தனா். பக்கத்து வீட்டினா், இருவரும் கணவா்-மனைவி என்று நினைத்துள்ளனா்.
இந்நிலையில் அந்த பெண், கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனால் அவா், ஆனந்தகிருஷ்ணனை தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளாா். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் திருமணம் செய்ய மறுத்து தலைமறைவானாா்.
இதையடுத்து அப்பெண், அசோக்நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆனந்தகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் ஆனந்தகிருஷ்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்
நெல்லை இளைஞா் குமரியில் கொலை: ஒருவா் கைது

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

முதியவரைக் கொன்று நகைகளைத் திருடி சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது

மாணவியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

