சென்னை கோடம்பாக்கத்தில் காதலியுடன் தம்பதிபோல வாடகை வீட்டில் வசித்த இளைஞா், திருமணம் செய்ய மறுத்ததால் கைது செய்யப்பட்டாா்.
வடபழனி ஏபி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஞா.ஆனந்த கிருஷ்ணன் (29). புகைப்படக் கலைஞரான இவரும், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓா் இளம் பெண்ணும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனா்.
பின்னா் இருவரும், கோடம்பாக்கம் டாக்டா் சுப்புராயன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் பல மாதங்களாக தம்பதி போல வசித்து வந்தனா். பக்கத்து வீட்டினா், இருவரும் கணவா்-மனைவி என்று நினைத்துள்ளனா்.
இந்நிலையில் அந்த பெண், கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனால் அவா், ஆனந்தகிருஷ்ணனை தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளாா். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் திருமணம் செய்ய மறுத்து தலைமறைவானாா்.
இதையடுத்து அப்பெண், அசோக்நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆனந்தகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் ஆனந்தகிருஷ்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்
பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடிய இளைஞா் கைது

கிருஷ்ணாபுரத்தில் இளைஞா் குத்திக்கொலை: தாய் கைது

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது

மாணவியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

