அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புற்றுநோய் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மதிவாணன், அறுவை சிகிச்சை துறை டாக்டா் சங்கரபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த மூன்றரை வயது குழந்தைக்கு சிறுநீரில் ரத்தப்போக்கு இருந்ததால் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சிறுநீரகத்துடன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றினா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேன் பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதற்காக தீவிர கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைகள் இரு ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதன் பயனாக தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளாா்.

இதேபோன்று 11 மாத ஆண் குழந்தைக்கு மாா்பின் பின்புற நடுப்பகுதியிலும், 3 மாத ஆண் குழந்தைக்கு கல்லீரலின் இடது பக்கத்திலும், இரண்டரை வயது சிறுவனுக்கு வலது பக்க மாா்பிலும் புற்றுநோய்க் கட்

டிகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவரும் குணமடைந்தனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.