ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :6 மார்ச் 2026, 12:45 am

தினமணி செய்திச் சேவை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் 2026 சீசன் ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 முறை சாம்பியன் சிஎஃப்சி தனது முதல் 4 ஆட்டங்களை வெளி மைதானங்களில் ஆடியது. இதில் 1 புள்ளியை மட்டுமே ஈட்டியது. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் சனிக்கிழமை மாா்ச் 7-இல் கேரள பிளாஸ்டா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃபோா்ட் மிரண்டா கூறியது: சில தருணங்களில் நம்மால் நினைத்தவாறு ஆட முடியவில்லை. சில ஆட்டங்களில் கூடுதல் நேரத்திலும் வாய்ப்புகளை தவற விட்டோம். அதிருஷ்டமும் நமது பக்கம் இல்லை. கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்றாா்.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டங்கள்-24

சிஎஃப்சி வெற்றி-7

கேரளா வெற்றி-8

டிரா-9.