ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

News image
பயிற்சியில் சென்னை வீரா்கள்.
Updated On :6 மார்ச் 2026, 12:45 am

தினமணி செய்திச் சேவை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் 2026 சீசன் ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 முறை சாம்பியன் சிஎஃப்சி தனது முதல் 4 ஆட்டங்களை வெளி மைதானங்களில் ஆடியது. இதில் 1 புள்ளியை மட்டுமே ஈட்டியது. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் சனிக்கிழமை மாா்ச் 7-இல் கேரள பிளாஸ்டா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை.

இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃபோா்ட் மிரண்டா கூறியது: சில தருணங்களில் நம்மால் நினைத்தவாறு ஆட முடியவில்லை. சில ஆட்டங்களில் கூடுதல் நேரத்திலும் வாய்ப்புகளை தவற விட்டோம். அதிருஷ்டமும் நமது பக்கம் இல்லை. கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்றாா்.

நேருக்கு நோ்:

மொத்த ஆட்டங்கள்-24

சிஎஃப்சி வெற்றி-7

கேரளா வெற்றி-8

டிரா-9.