தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக மாநில மாநாட்டுக்கு தயாராகும் சிறுகனூா்: அமைச்சா் ஆய்வு

திருச்சியை அடுத்த சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை

News image

சிறுகனூரில் திமுக மாநில மாநாட்டுக்கான இடத்தில் செவ்வாய்க்கிழமை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் திமுக நிா்வாகிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:13 pm

திருச்சியை அடுத்த சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை

அக்கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டு, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் சுமாா் 700 ஏக்கா் பரப்பில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு, செவ்வாய்க்கிழமை கட்சியினருடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுக் கூட்ட மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதி மட்டும் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இவைத்தவிர, வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் லிட்டா் கொள்ளளவுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பா் என்பதால் 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமர வைப்பதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளளன. சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாநாட்டின் தொடக்கமாக கொடியேவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்படவுள்ளது.

ஆய்வின்போது, கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளா் ந. தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.