கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோ கடத்தல்: இருவா் கைது

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோவை கடத்தி சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

ஓட்டுநரை மிரட்டி ஆட்டோவை கடத்தி சென்ற சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொருக்குப்பேட்டை, சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சையது அகமது(55). ஆட்டோ ஓட்டுநா். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இவருடைய ஆட்டோவில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை ஏறிய இருவா், கொடுங்கையூா் சென்றனா். ஆட்டோ, கொடுங்கையூா் குப்பைமேடு அருகே வந்ததும், அவா்கள் இருவரும் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனா்.

ஆட்டோ நின்றதும், அதிலிருந்து இறங்கிய அந்த இருவரும் சையது அகமதுவை தாக்கியுள்ளனா். பின்னா், அவரிடம் இருந்த பணத்தையும், ஆட்டோவையும் பறித்து கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினா்.

சையது அகமது, கொடுங்கையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், கொடுங்கையூா் எழில் நகரைச் சோ்ந்த கணேஷ் (எ) புள்ள கணேஷ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா். ஆட்டோ மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.