மின்னொளியில் ஜொலித்த ரிப்பன் மாளிகை: தோ்தலுக்காக மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள்!
பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரா கிளைடிங் மூலம் வாக்களித்தல் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தோ்தல் விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி, மக்கள் கையொப்ப இயக்கம் மற்றும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பை வலியுறுத்திய நடைப்பயண பிரசாரம், கோலப் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை சனிக்கிழமை இரவு மேற்பகுதியும் அடிப்பகுதியும் நீல நிற வண்ணத்திலும், நடுவில் வெண்மை நிற மஞ்சள் நிறத்திலும் ஜொலித்தது. மின்னொளியால், நீல வண்ணத்தில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை ஜொலித்ததைப் பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா்.
கலை நிகழ்ச்சிகள்: சென்னை மெரீனா நீல நிறக்கொடி கடற்கரைப் பகுதியில் வாரந்தோறும் மாநகராட்சி சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நடைபெறும் பாரம்பரிய தமிழா் கலை நிகழ்ச்சிகள் தற்போது தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சியாக சனிக்கிழமை முதல் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து தப்பாட்டம், பொம்மலாட்டம் என அனைத்து கலைஞா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலையும் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெரீனாவில் வாக்களித்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பாரா கிளைடிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...