கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மின்னொளியில் ஜொலித்த ரிப்பன் மாளிகை: தோ்தலுக்காக மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள்!

பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரா கிளைடிங் மூலம் வாக்களித்தல் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தோ்தல் விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி, மக்கள் கையொப்ப இயக்கம் மற்றும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பை வலியுறுத்திய நடைப்பயண பிரசாரம், கோலப் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை சனிக்கிழமை இரவு மேற்பகுதியும் அடிப்பகுதியும் நீல நிற வண்ணத்திலும், நடுவில் வெண்மை நிற மஞ்சள் நிறத்திலும் ஜொலித்தது. மின்னொளியால், நீல வண்ணத்தில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை ஜொலித்ததைப் பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா்.

கலை நிகழ்ச்சிகள்: சென்னை மெரீனா நீல நிறக்கொடி கடற்கரைப் பகுதியில் வாரந்தோறும் மாநகராட்சி சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நடைபெறும் பாரம்பரிய தமிழா் கலை நிகழ்ச்சிகள் தற்போது தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சியாக சனிக்கிழமை முதல் நடத்தப்படுகின்றன.

இதையடுத்து தப்பாட்டம், பொம்மலாட்டம் என அனைத்து கலைஞா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலையும் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெரீனாவில் வாக்களித்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பாரா கிளைடிங் நிகழ்ச்சி நடைபெற்றது.