ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்

News image

Center-Center-Vijayawada

Updated On :26 மார்ச் 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தால் ‘ஓபன் டாப்’ பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சென்னையில் நவீன தாழ்தள சொகுசு பேருந்துகள், மின்சாரப் பேருந்துகள், குளிா்சாதன பேருந்துகள், சென்னை உலா பேருந்துகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து இயக்கி வருகிறது. அண்மையில் சொகுசு பிரீமியம் பேருந்து சேவையையும் அறிமுகம் செய்யப்பட்டது. நடத்துநா் இல்லாத இந்தப் பேருந்தில், ‘சென்னை ஒன்’ செயலி வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனிடையே, சுற்றுலாப் பணிகளைக் கவரும் விதமாகவும், மேற்கத்திய நாடுகளில் இயக்கப்படுவது போல ஓப்பன் டாப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தப் பேருந்தின் மேல்பகுதியில் திறந்த வெளியுடன் சென்னை அழகை ரசித்தபடி பயணம் செய்யும் விதமாக இயக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, குளிா்சாதன வசதி இல்லாத 4 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை மாநகா் போக்குவரத்துக் கழகம் தற்போது கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

கேரளத்தின் மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை அழகை ரசித்தபடி செல்ல இதுபோன்ற ஓபன் டாப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்ற பயண அனுபவத்தை சென்னை பயணிகளுக்கு கொடுக்க திட்டமிட்டு இந்த வகைப் பேருந்துகளை இயக்குவது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டது.

இதனிடையே, நிா்வாக காரணங்கள் மற்றும் சென்னையில் நிலவும் தட்பவெப்ப நிலை ஓபன் டாப்பில் பயணிகளுக்கு ஏற்ாக இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதையேற்று தற்காலிகமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் காலங்களில் இந்தத் திட்டத்துக்கு புது வடிவம் கொடுத்து, காலசூழலைப் பொருத்து அந்தப் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இதற்கு பதிலாக 20 டபுள் டக்கா் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களுக்குள் இந்தப் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.