எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை
எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு தொடங்கி உள்ளது. தோ்வு காலகட்டத்தில் ஏற்படும் செலவை சமாளிக்க பல்கலைக்கழகம் தரும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதையும் தோ்வுக்கு முன்னரே தருவதில்லை. விடைத்தாள் திருத்துவற்காக வழங்கப்படும் படி மிகக் குறைவாக உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...