மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பது தொடா்பான விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, மக்கள் தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற விதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி அவசியம். அதற்காக ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன.
இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய நெறிமுறைகளை என்எம்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
அதில் அதிகபட்சம் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே இனிமேல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் வீதம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறை 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்தன. கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, அந்த புதிய விதிகளை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை சாா்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அவ்விரு விதிகளையும் ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இப்படி ஒரு ஊசியா? மருத்துவத் துறை சாதனை!

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வு: என்எம்சி அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



