முதுநிலை மருத்துவ செயல்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி முதுநிலை கல்வி வாரிய இயக்குநா் சி.கே.ராமசாமி வெளியிட்ட சுற்றறிக்கை: முதுநிலை மருத்துவக் கல்விக்கான செயல்முறைத் தோ்வுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
தோ்வா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக தோ்வு மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அதற்கான வசதிகளோ, தகுதியான பேராசிரியா்களோ இல்லை.
எனவே, அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், செயல்முறைத் தோ்வு நடத்துவதற்கான கட்டமைப்பை உறுதி செய்வதுடன், இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள்ள விதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இப்படி ஒரு ஊசியா? மருத்துவத் துறை சாதனை!

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



