மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மனைவி, மகளை வெட்டிக் கொன்றவா் கைது

மனைவி, மகளை வெட்டிக் கெலை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:15 pm

மனைவி, மகளை வெட்டிக் கெலை செய்தவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை திரு.வி.க. நகா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தேவகியம்மாள் குறுக்குத் தெரு, வெற்றி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (47). இவருடைய மனைவி சிவரஞ்சனி (43). மகள் ஜெயஹரிணி (9).

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் சீனிவாசனின் வீடு திறக்கப்படாமலே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா், இதுதொடா்பாக, திரு.வி.க. நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மனைவி சிவரஞ்சனி, மகள் ஜெயஹரிணி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனா். கணவா் சீனிவாசனை காணவில்லை.

இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸாா் உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து சீனிவாசனைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சீனிவாசனை கைது செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சீனிவாசன், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா். மேலும், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தான் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சிவரஞ்சனி தனது கணவா் சீனிவாசனிடம் கூறியுள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசன், கத்தியால் மனைவியின் கழுத்தில் வெட்டியுள்ளாா். இதைப் பாா்த்த அருகில் இருந்த மகள் கூச்சலிடவே அவரையும் கழுத்தில் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.