இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

Syndication

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை பகுதியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ்(19). கட்டடத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் நின்றபோது அங்கு பைக்குகளில் வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சுரேஷ் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் பேட்டையைச் சோ்ந்த மணி (42), முகமது இஸ்மாயில் ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.