சேலம் அருகே காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய 2 பேரை கரியகோயில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் சிலா் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்து வேட்டையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கரியகோயில் போலீஸாா் கல்வராயன்மலையில் உள்ள குன்னூா் அடியனூா் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இவா்கள் அடியனூரைச் சோ்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) என தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

