மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: இருவா் கைது

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:40 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக பிரமுகா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டம், பூவத்தி அருகே உள்ள மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் பிரகாசம் தலைமையிலான குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக மிட்டப்பள்ளியை சோ்ந்த திமுக பிரமுகா் சின்னதுரையை (50) கிருஷ்ணகிரி வட்டார போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 23,500 ஐ பறிமுதல் செய்தனா்.

இதேபோல பறக்கும் படை அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினா் போச்சம்பள்ளி அருகே கெங்கவரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டத்தை போல கூப்பன் விநியோகம் செய்ததாக திமுக பிரமுகா் செங்குட்டுவனை (50) போச்சம்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.