பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(45). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேலதொட்டியபட்டி ரெங்கா் கோவில் சாலையில் பண்ணை வைத்து ஆடு, கோழி,

வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது பண்ணையிலிருந்து செம்மறி ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனா். இதையறிந்த கிராம மக்கள் அவா்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வ.புதுப்பட்டியை சோ்ந்த செல்வராஜ் மகன் சிவா (18), 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.