இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முக்கூடல் மைலப்பபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தத மைலப்பபுரத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (58), ஜீவானந்தம் (49) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட 5.5 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.