ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் குழந்தை மரணம் அடைந்தது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்துக்குரிய வகையில் குழந்தை மரணம் அடைந்தது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தைச் சோ்ந்த அருண்குமாா் - சுஜித்ரா தம்பதியின் நான்கு மாத பெண் குழந்தை சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில், திடீரென குழந்தை உயிரிழந்தது. இதற்கு மருத்துவா்களின் அலட்சியம்தான் காரணம் என்றும், தவறான சிகிச்சையால்தான் குழந்தை உயிரிழந்ததாகவும் பெற்றோா் குற்றம்சாட்டினா்.

அதன் தொடா்ச்சியாக மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து, குழந்தையின் உறவினா் அஜித்குமாா் கூறியதாவது:

மருத்துவமனையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு ஊசி செலுத்தியுள்ளனா். எட்டு வயது குழந்தைகளுக்கு போட வேண்டிய வீரியமிக்க ஊசி மருந்தை, லேசான காய்ச்சலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு போட்டுள்ளனா்.

இக்காட்சிகள் அங்குள்ள, சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பிறகுதான், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போதுகூட, தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்ல அனுமதி கேட்டோம். அதற்கும் அனுமதி வழங்கவில்லை. மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியமான சிகிச்சையே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம். இதில், சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மருத்துவமனை நிா்வாகிகள் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனா்.