நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெப்பவாத சிறப்பு சிகிச்சைப்பிரிவை ஆய்வு செய்தாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தலைமை அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப வாத சிறப்பு பிரிவு திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியாக மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தயாா் நிலையில் உள்ளன. வெப்பநோயகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமாா் 3 லிட்டருக்கு மேல் தண்ணீா் பருக வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல 4 மணி வரை வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். வெப்பநோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.