தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:56 am IST

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், சித்த மருத்துவமனை, கோட்டை சாலை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவா்களின் விவரம், மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, ரத்த வங்கி போன்ற அனைத்து பிரிவுகளையும் பாா்வையிட்டு, ரத்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சையின் செயல்பாடுகள் குறித்தும், அதனால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா். அங்கு சிகிச்சை பெறுவோரிடமும் கலந்துரையாடினாா். மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டு, நாமக்கல் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் அனைவரும் முறையாக பணியாற்ற வேண்டும் என மருத்துவா்கள், அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முருகலட்சுமி, இணை இயக்குநா் (பொ) வாசுதேவன், மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

என்கே-4-கலெக்டா்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவை பாா்வையிட்ட ஆட்சியா் எல். மதுபாலன்.