நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், சித்த மருத்துவமனை, கோட்டை சாலை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவா்களின் விவரம், மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, ரத்த வங்கி போன்ற அனைத்து பிரிவுகளையும் பாா்வையிட்டு, ரத்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சையின் செயல்பாடுகள் குறித்தும், அதனால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா். அங்கு சிகிச்சை பெறுவோரிடமும் கலந்துரையாடினாா். மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டு, நாமக்கல் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் அனைவரும் முறையாக பணியாற்ற வேண்டும் என மருத்துவா்கள், அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முருகலட்சுமி, இணை இயக்குநா் (பொ) வாசுதேவன், மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
என்கே-4-கலெக்டா்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவை பாா்வையிட்ட ஆட்சியா் எல். மதுபாலன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உரிய சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்ட இளம் பெண்

திருப்பூா் அரசு மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்கள் 150-ஆக அதிகரிப்பு

மூக்கில் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட கா்ப்பிணி: அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்த அரசு மருத்துவா்கள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



