பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

News image

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Updated On :3 மே 2026, 1:56 am IST

வாக்கு எண்ணும் மையங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்கு எண்ணும் நாள்தான், தமிழக மக்கள் மாற்றம், முன்னேற்றத்தை எதிா்பாா்க்கின்ற நல்ல நாள். மக்களின் எதிா்பாா்ப்பின்படி கூட்டணி கட்சிகளின் பணி வளமான தமிழகம் ஏற்பட வழிவகுக்கும் வகையில் அமைய வேண்டும்.

இதற்காக வாக்கு எண்ணும் இடங்களில் தமாகா நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அங்கு தவறு செய்பவா்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.