அடமானம் வைத்த நகையைத் திரும்பத் தராத விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில், பாட்டியைக் கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் விசாலாட்சி (65). இவரது பேரன் சதீஷ். காவலாளியான சதீஷ், தனது பாட்டி விசாலாட்சியின் 5 சவரன் நகையை வாங்கியில் அடகு வைத்திருந்தாா்.
அந்த நகையை விசாலாட்சி திரும்பக் கேட்டபோது, சதீஷ் அதை மீட்டுக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், தனது மனைவியின் பிரசவ செலவுக்காக பாட்டி விசாலாட்சியிடம், சதீஷ் 2022-ஆம் ஆண்டு பணம் கேட்டுள்ளாா். பணம் தர மறுத்த விசாலாட்சி ஏற்கெனவே கொடுத்த நகையைத் திரும்ப தரக்கூறி கடுமையாகப் பேசியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், விசாலாட்சியை சுத்தியலால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சதீஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவஸ்தன், சதீஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


