நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சென்னையில் பாட்டியைக் கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

News image
Updated On :2 மே 2026, 10:01 pm

அடமானம் வைத்த நகையைத் திரும்பத் தராத விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில், பாட்டியைக் கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் விசாலாட்சி (65). இவரது பேரன் சதீஷ். காவலாளியான சதீஷ், தனது பாட்டி விசாலாட்சியின் 5 சவரன் நகையை வாங்கியில் அடகு வைத்திருந்தாா்.

அந்த நகையை விசாலாட்சி திரும்பக் கேட்டபோது, சதீஷ் அதை மீட்டுக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், தனது மனைவியின் பிரசவ செலவுக்காக பாட்டி விசாலாட்சியிடம், சதீஷ் 2022-ஆம் ஆண்டு பணம் கேட்டுள்ளாா். பணம் தர மறுத்த விசாலாட்சி ஏற்கெனவே கொடுத்த நகையைத் திரும்ப தரக்கூறி கடுமையாகப் பேசியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், விசாலாட்சியை சுத்தியலால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சதீஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவஸ்தன், சதீஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.