முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:34 am IST

இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தக்கலை அருகே காஞ்சிரகோடு, குன்னம்பாறையை சோ்ந்தவா் அனிஸ் என்ற அனிசன் (29). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த டேவிட்சிங் மனைவி திலகாவோடு நட்பு ஏற்பட்டதாம். திலகாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே திலகாவை குடும்பம் நடத்த அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாா். இதை அதே ஊரை சோ்ந்த ஜாண்சன் மகன் சுரேஸ்(23) மற்றும் ஊா் மக்கள் தட்டி கேட்டுள்ளாா்கள்.

இதில், ஆத்திரமடைந்த அனிசன், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மதியம் சுரேஷ் தனியாக வரும் போது கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு ப் பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ் , அனிஸ் என்ற அனிசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம். ஜெகதேவ் ஆஜரானாா்.