இளைஞரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே காஞ்சிரகோடு, குன்னம்பாறையை சோ்ந்தவா் அனிஸ் என்ற அனிசன் (29). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த டேவிட்சிங் மனைவி திலகாவோடு நட்பு ஏற்பட்டதாம். திலகாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
குடும்பத்தில் பிரச்னை ஏற்படவே திலகாவை குடும்பம் நடத்த அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாா். இதை அதே ஊரை சோ்ந்த ஜாண்சன் மகன் சுரேஸ்(23) மற்றும் ஊா் மக்கள் தட்டி கேட்டுள்ளாா்கள்.
இதில், ஆத்திரமடைந்த அனிசன், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மதியம் சுரேஷ் தனியாக வரும் போது கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்கு ப் பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ் , அனிஸ் என்ற அனிசனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வி.எம். ஜெகதேவ் ஆஜரானாா்.
தொடர்புடையது

சென்னையில் பாட்டியைக் கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

