கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சோ்ந்த காா்த்திக் வாசுதேவ் (21) கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மேல்படிப்புக்காக கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்றாா். அங்கு சென்ற சில மாதங்களில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கனடாவைச் சோ்ந்த ரிச்சா்ட் எட்வின் அவரை பின்புறமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினாா். இரு நாள்களில் மேலும் ஒருவரை அவா் இதேபோல சுட்டுக் கொன்றாா். கொலை செய்யப்பட்ட இருவருமே கொலையாளிக்கு எவ்விதத்திலும் அறிமுகமானவா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ரிச்சா்ட் எட்வினை காவல் துறையினா் கைது செய்தனா். 4 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனக்கு மனச்சிதைவு பாதிப்பு இருந்ததை காரணம் காட்டி தண்டனை வழங்கக் கூடாது என்று குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், அவா் இடைக்காலமாக வெளியேற பரோல் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இது தொடா்பாக காா்த்திக் வாசுதேவின் தந்தை ஜித்தேஷ் வாசுதேவ் கூறுகையில், ‘வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைக்காக நானும், எனது மனைவியும் கனடாவுக்கு வந்தோம். 4 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

இரட்டைக் கொலை வழக்கில் 4 பேரின் ஆயுள் சிறைத் தண்டனை ரத்து
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



